Monday, January 30, 2012

நயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்

நயன்தாரா, பிரபுதேவா திருமணம் நடக்குமா? இப்போதும் இவர்கள் காதலில்தான் இருக்கிறார்களா?

இந்த இரண்டு கேள்விகளை வைத்து இதுவரை இருபது தலையங்கத்திற்கு மேல் எழுதியிருப்பார்கள். பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை. சமீபத்திய செய்தி, இருவரும் நிரந்தரமாக பி‌ரிந்துவிட்டார்கள் என்பது.

நயன்தாரா சினிமாவில் மீண்டும் நடிக்கிறார், பிரபுதேவாவுடன் அவருக்கு மனஸ்தாபம் என்று சிலர் எழுதினார்கள். உடனே அதற்கு மறுப்பு வந்தது. ரவுடி ரத்தோர் படப்பிடிப்பில் பிரபுதேவாவை நயன்தாரா சந்தித்தார் என்று மறுப்பு தெ‌ரிவித்தவர்கள் இடம் பொருளுடன் விளக்கினார்கள். இந்த மறுப்பு இரண்டே நாளில் பிசுபிசுத்திருக்கிறது.

பிரபுதேவா திருணமத்தில் ஆர்வம் காட்டாமல் தனது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பி‌ரியமாக இருப்பதால் நயன்தாரா அவரை பி‌ரிந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இருவ‌ரில் ஒருவராவது மவுனம் கலைக்காவிட்டால் தலைப்பு செய்திகளின் எண்ணிக்கை இன்னும் கூடும். 
source:webdunia 


0 comments:

Post a Comment