தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Friday, October 26, 2012

வெற்றி தரும் ஸ்லோகம்


அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.


Tuesday, May 15, 2012

சித்தர்கள் குறிப்பு:

தமிழ் மண்ணின் பொக்கிசங்களாக போற்ற பட வேண்டியவர்கள் சித்தர்கள் , உலகமே இன்று கொண்டாடபடும் யோகக் கலையின் பிதாமகன்கள் .
இத்தகைய சித்த புருஷர்கள் தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும்,வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்.

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தூம்,ரசவாதத்தினால் இரும்பை பொன்னாகியும்,கூடு வீடு கூடு பாய்ந்தும்,மூச்சடக்கி விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வாசபடித்தியும் பலவாறாக அதிசிய சாதனைகளை புரிந்து இருகிறார்கள்


இயற்கைக்கு மாறான பல அற்புதங்களையெல்லாம் செய்த வல்லவர்கள் ; வெறும் சித்து விளையாட்டோடு நிற்கவில்லை யோகம்,அறிவு,வைத்தியம் போன்ற பல அறிய
பெரிய விஷயங்களை நமது நன்மைக்காக அருளி செய்திருக்கிறார்கள் .இவர்கள், நம் பிறப்பின் நோக்கத்தை நமக்கு அறிவித்து, நம்மை நல்வலிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைக்க வேண்டி தோன்றிய அவதார புருஷர்கள்.
பார்போற்றும் பதினெட்டு சித்தர்கள் பெயர்கள்  :
1.திருமூலர்
2.போகர்
3.கருவூரார்
4.புலிப்பாணி
5.கொங்கனர்
6.அகப்பேய் சித்தர்
7.சட்டைமுனி
8.சுந்தரானந்தர்
9.தேரையர்
10.கோரக்கர்
11.அகத்தியர்
12.பாம்பாட்டி சித்தர்
13.சிவவாக்கியர்
14.உரோமரிசி
15.காகபூசன்டர்
16.இடைக்காட்டு சித்தர்
17.குதம்பை சித்தர்
18.பதஞ்சலி முனிவர்.  

Sunday, May 13, 2012

இராமரின் சரிதை (அ) இராமவரலாறு

ஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிலக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.

ராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேலையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்) தனுகோடிக்கு கிலக்கே சுமார் 25 கி.மீ தூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ளது.1964 புயலுக்கு முன் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாற்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. 
தற்போது இல்லை.இவ்வாறாக ஆஞ்சநேயர்
குந்துகாலிட்டு  விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.

மேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த  வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே  என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள
தலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.மேற்கண்ட சரித்தரசான்றுகளுடன் ராமரின் கதை அமைதுள்ளதால் ,ராமாயணம் இதிகாசம் இல்லை .ராமர் சரிதை (அ) ராமர் வரலாறு என்பதே சரி.
                                                                          
                            திரட்டியவர்:    
                                 பொன்.களங்சியம் 
                                 ஓய்வு தலைமை ஆசிரியர்
                                 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                 மண்டபம்
                                   ராமநாதபுரம் மாவட்டம் .

Saturday, May 12, 2012

கலியுகம் பிறந்து அரசுரிமை கட்டங்கள் வருஷங்கள்

1.பரிசித்து -500 வருடங்கள்
2.ஜெனமே ஜெயம்-300 வருடங்கள்
3.நரேந்திரன் -200 வருடங்கள்
4.பாலசந்திரன் -95 வருடங்கள்
5.சாரங்கன் -120 வருடங்கள்
6.சுனிதன்  -100  வருடங்கள்
7.விக்ரமாதித்தன் -2000 வருடங்கள்
8.போஜராஜன்   -83 வருடங்கள்
9.காலியன் – 380 வருடங்கள்
10.அப்பாஸீ -500 வருடங்கள்
11.கர்த்தார்கள்  -475 வருடங்கள்
12.முகமதியன் -95 வருடங்கள்
13.வெள்ளைப்பேண் -60 வருடங்கள்
14.வெள்ளையன் -140 வருடங்கள்
15.காங்கிரஸ் -17  வருடங்கள்  
கலியுகம் பிறந்து சித்திரை மாதம் வெள்ளிக்கிலமை நவமி திதி மூல நட்சதிரம் ஷை வரதை முன்னிட்டு அரசாங்கத்தால் சித்திரை மாதம் முதல் ஒரு வாரத்திற்குள் முதல் (புது) வெளிக்கிலமை விடுமுறையாகும்.
      (ஞாசராமக்கலை –வெள்ளையாரை குறிக்கும்)
கலியுகம் பிறந்து 5067 வது வருடம் நடதேறிவருகிறது.பரிசித்து அன்று முதல் இன்று வரை 15வது காங்கிரஸ் நடந்தேறி வருகிறது.

                                  திரட்டியவர்:   
                                         பொன்.களங்சியம் 
                                         ஓய்வு தலைமைஆசிரியர்
                                         ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
                                          மண்டபம்
                                          ராமநாதபுரம் மாவட்டம் .

Wednesday, April 25, 2012

Tuesday, April 24, 2012

விரைவாக காப்பியாக என்ன செய்ய வேண்டும்:

பொதுவாக காப்பி என்பது சற்று தாமதமாக தான் ஆகும்.
சான்றிற்கு SYSTEM TO  CD-கு காப்பி செய்தால் தாமதமாக காப்பி ஆகும்.அதேபோல் SYSTEM TO PENDRIVE காப்பி ஆகும்போது விரைவாக ஆகும்.SYSTEM-குள்ளயே காப்பி பேஸ்ட் செய்யும் பொது விரைவாக ஆகும்.SYSTEM-கூல் வைரஸ் ஏதேனும் இருந்தால் SYSTEM-குள் காப்பி பேஸ்ட் செய்யும் போதும் மற்றும் SYSTEM TO மற்றொரு சாதனதுக்கு காப்பி செய்யும் போதும் கூட வேகம் சற்று குறைவாகதான் இருக்கும்.சரி, இப்போது ஃபைல் போல்டெர்களை அடங்கிய தகவல்களை மிகவும் விரைவாக காப்பி செய்வதற்கு ஏதேனும் சாஃப்ட்வேர் உள்ளதா என்றால் ,கண்டிப்பாக உள்ளது என்றே சொல்லலாம் .கூகிள்க்கு சென்று டெரா காப்பி (tera copy) அடித்தால் டெரா காப்பி சாஃப்ட்வேர் இலவசமாக கிடைக்கும்.

 அதனை டவுண்லோட் செய்து system-இல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.பிறகு எந்த ஃபோல்டர் காப்பி செய்ய வேண்டுமோ அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்தல் டெரா காப்பி என்ற பெயரோடு ஒரு வரி இருக்கும். அந்த வரியை கிளிக்செய்தல் 
டெரா காப்பிசாஃப்ட்வேர் ஓபன் ஆகும்.அவற்றில் உள்ள ஐகானில் காப்பி என்பதை கிளிக் செய்தல் காப்பியாக தயாராகி விடும்.பிறகு எங்கு வைக்கவேண்டும் என்பதையும் browse என்ற ஆப்ஷன் மூலம் தேர்வு செய்து விட்டால் விரைவாக காப்பி ஆகிவிடும்.ஒரு வேலை காப்பியாகின்ற ஃபைல்ஆனது வைரஸ் ஃபைல் ஆக இருந்தால் அவை காப்பியாகாது. ஃபைல் ஆனது காப்பியாகி முடிந்தவுடன் ரிபோர்டில் ஸ்டேட்டஸ் என்ற பிரிவில் அதன் விளக்கம் இடம்பெற்று இருக்கும் .    

ஆன்லைனில் நம் கையெளுத்து:


http://www.mylivesignature.com/mls_sigdraw.php என்ற தளத்திற்கு செல்லவும்.
புதிதாக உருவாக்குபவற்கு ஏதாவது கிறுக்கல் ஏற்பட்டால்
“start over” என்ற பட்டனை அலுத்தி கிளியர் செய்து கொள்ளலாம் .கையெளுத்து உருவாக்கியபின் “create signature”என்ற பட்டனை அலுத்தி உங்கள் கையெலுத்தை உங்கள் கம்ப்யூட்டரில் படமாக சேமித்து வைத்துகொள்ளலாம்

பெரிய கோப்புகளை அனுப்ப SENDUIT :

நீங்கள் பெரிய அளவு கொண்ட கோப்புகளை இணையம் வலியாக அனுப்ப வேண்டி இருக்கிறதா ? மின்அஞ்சல் இது மாதிரியான வேலைகளுக்கு உதவுவது கடினம் .என்னதான் விதவிதமான சேவைகள் வலங்குகிறோம் என்று மின்அஞ்சல் சேவை அளிப்பு நிறுவனங்கல் கூறிக் கொண்டாலும் கோப்பின் அளவு என்று வரும் பொது தயக்கம் காட்டவே செய்கிறார்கள்.

நீங்கள் 100 எம்‌பி வரையிலான கோப்புகளை எளிதாக அனுப்பி வைக்க வேண்டுமா?SENDUIT இணையதளம் உங்களுக்கு கை கொடுக்கும் .நீங்கள் விரும்பினால் பயன்படுத்திய கோப்புகளை எப்போதும் நீக்கிவிட வேண்டும் என்பதையும் சொல்லிவிடலாம் .ஒரு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரையிலான கால அளவைத் தேர்தேடுக்கவும் .
தள முகவரி:www.senduit.com   

Monday, March 19, 2012

தாஉத் இப்ராஹிம் கூட்டாளி பங்களோ ரூ 7.5 கோடிக்கு ஏலம்.


மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் முக்கிய இடமான சியாமளா ஹீல்ஸ் பகுதியில் நடிரா காலனி உள்ளது.இங்குதான் தீவிரவாதி தாஉத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளியாக கருதபாடும் கடத்தல் மன்னன் இக்பால் மிர்ச்சி தனது அயல்நாட்டு மனைவி பெயரில் 1991-ம் ஆண்டு 8343 சதுர அடி கொண்ட மிகப்பெரிய பங்களோ ஒன்று வாங்கினார்.

இந்த பங்களோ 2004-ம் ஆண்டு முதல் யாரும் குடியிருக்காமல் காலியாக இருந்துளது .இந்தநிலையில் ,சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இந்த பங்களோவை சுங்கவரிதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .இதை  ஆடுத்து ,கடத்தல் மற்றும் அன்னியசெலவாணி காட்டு  பங்களோவை ஏலத்திற்கு விட்டனர் .இதற்காகவே ,இந்த அதிகாரிகள் மும்பையில் இருந்து இங்கு வந்தனர்.

மும்பையை தலைமயீடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரூ .7.5 கோடிக்கு இந்த பங்களோவை ஏலத்திற்கு எடுத்தது .இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது ,இக்பால் மிர்ச்சின் அச்சுறுதல் காரணமாக ,இந்த பங்களோ ஏலம் விடும் பணி நடைபெறாமல் போனது குறிபடதக்கது .      

Saturday, March 17, 2012

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

மூன்று இதயங்கள் கொண்ட மீன்

கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!

கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.

இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.

நீல நிற இரத்தம்

கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்க‌ள்.
thanks :webdunia

Friday, March 16, 2012

கல்விக்கென்றே பிரத்தியேகமாக டெட்-எட் வீடியோ சேனல்!

ல்விக்கென்றே பிரத்தியேகமான டெட்-எட் என்ற வீடியோ சேனலை யூடியூபில் அறிமுகம் செய்து இருக்கிறது டெட் நிறுவனம். இந்த சேனலை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லட்களிலும் பார்க்க புதிய அப்ளிக்கேஷனையும் உருவாக்கி உள்ளது டெட் நிறுவனம். இதனால் கல்வியை பற்றி பயனுள்ள சில தகவல்களை இந்த வீடியோ சேனலில் பெற முடியும்.
இப்படி கல்வியை மையப்படுத்தி பல நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது. புதிய வழி முறைகளை ஏற்படுத்த சிறந்த யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இது போன்ற வித்தியாசமான தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் மக்களுக்கு சில முக்கிய பயன்பாடுகளை கொடுக்க முடியும் என்றும் டெட் நிறுவனத்தின் எக்ஸிக்கியூட்டிவ் புரொடியூஸரான ஜுன் கொஹென் தெரிவித்துள்ளார்.
டெட் நிறுவனம் உருவாக்கி இருக்கும் இந்த அப்ளிக்கேஷனில் ஆஃப்லைன் பிரவுசிங், வியூவிங் போன்ற சவுகரியங்களையும் பெற முடியும். வாக்கிங், ஜாகிங் என்று வெளியில் செல்லும் போது டெட் வீடியோவினை பார்க்க முடியாது. இந்த குறையை தீர்க்க ஆடியோ ஸ்ட்ரீமிங் சவுகரியமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்று கொண்டு இருக்கும் போதும் இதன் ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியின் மூலம் இதன் பயனுள்ள தகவல்களை கேட்டு மிகிழலாம்.thanks :oneindia

சுவையான மாம்பழ அல்வா

கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழத் துண்டுகள் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 2 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மாம்பழத் துண்டுகளை நன்றாக மசித்து வைத்து கொள்ள வேண்டும். மசித்து வைத்த மாம்பழங்களுடன் சர்க்கரையைப் போட்டு கிளறவும்.

பின்ன‌ர் பால் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் இருக்க நெய்யை சேர்த்து கிளறவும்.

அத‌ன்‌பின் கெட்டியான பதத்தில் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு. ஆறிய பிறகு சிறுத் துண்டுகளாக வெட்டினால், சுவையான மாம்பழ அல்வா ரெடி!

விரைவில் வருகிறார் லாரன்சின் தம்பி

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதை அண்ணனுடையான் படைக்கு அஞ்சான் என்று மாற்றலாம்.

செல்வராகவன் என்ற அண்ணனால் ஏற்றம் பெற்றவர் தனுஷ், ஜெயம் ரவிக்கு அண்ணன் ராஜா, முருகதாஸும், பூபதி பாண்டியனும் விரைவில் தங்கள் தம்பிகளை அறிமுகப்படுத்தயிருக்கிறார்கள். இந்த நீண்ட பட்டியலில் புதிதாக சேர்கிறார் ராகவா லாரன்ஸ்.

இவரும் தனது தம்பி வினோ லாரன்ஸை விரைவில் ஹீரோவாக்குகிறார். முன்னோட்டமாக முனி 3-ல் தம்பியை ஒரு பாடலுக்கு ஆடவிடப் போகிறாராம்.

பாசக்கார அண்ணன்கள். 
thanks:webdunia 

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - தப்பிக்கும் இந்தியா

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு நழுவும் போக்காகவே உள்ளது. இது போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக தாம் இருந்ததை மறைக்க எடுக்கப்படும் தப்பிக்கும் முயற்சியா என்பது புரியவில்லை.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.

2 ஆண்டுகளுக்கு பின் மார்ச் 14-ந்தேதி ‘இலங்கையின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ எனும் தனது இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திய கொலைவெறி தாக்குதல்களும், கொடுமைகளும், பன்னாட்டு சமூகத்திற்கு கொண்டு சேர்க்க ஆதாரங்களுடன் சேனல் 4 முயற்சி மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை ஆணித்தரமாக முன்வைக்கும் இந்த இரண்டாவது ஆவணப்படம், கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் பன்னாட்டு மனசாட்சியில் தொலைதூர நினைவுகளாக மறக்கப்படுவார்களா அல்லது அவர்களுக்கு பன்னாட்டு சமூகம் நிலைத்த நீதி வழங்குமா எனும் வேதனையான கேள்வியுடன் முடிவு பெறுகிறது.

முன்னதாக 2010 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட போரற்ற இடங்களில் நிகழ்ந்த படுகொலைகள், உணவும் மருத்துவ வசதிகளும் இல்லாது மரணமுற்ற அப்பாவி மக்கள், பதுங்கு குழிகளில் கொல்லப்பட்ட குழந்தைகள், பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கள் கறுப்புத்துணியால் கட்டுண்ட நிலையில், பின்னந்தலையில் குறிபார்த்துச் சுடப்பட்டு மடியும் இளைஞர்களின் உடல்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் போராளிகள் உள்ளிட்ட காட்சிகளோடு ஆவணப்படம் தொடங்குகிறது.

குறிப்பாக சேனல் 4-ன் இந்த 2-வது ஆவணப்படம் குறிப்பிட்ட போர்க்குற்ற ஆதாரங்களை பன்னாட்டு சமூகத்திற்கு முன்வைக்கிறது.

• இறுதி போர் நிகழ்ந்த காலப்பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை மீது எறிகணை தாக்குதல் நடைபெற்றதாகவும், அவை ஐ.நாவின் பாதுகாப்பு பதுங்குகுழிகளுக்கு மிக அருகில் விழுந்து வெடித்ததால் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்பான ஆதாரங்கள் ஐ.நா ஊழியர்களால் புகைப்படங்களாக எடுக்கப்பட்டதாகவும் ஆவணப்படம் விவரிக்கிறது.
முக்கியமாக, பொதுமக்களின் இருப்பிடங்களை இலக்காக்க் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஆதாரமாக இது கருதப்படுகிறது.

இலங்கை ராணுவம் தமிழ் மக்களைப் பட்டினி போட்டும், போதிய மருந்துகள் இல்லாமலும், மருத்துவ சிகிச்கைக்கான உபகரணங்களை வழங்காமலும் அம்மக்களைக் கூட்டமாக் கொன்றது எனவும், அதனை திட்டமிட்டு இலங்கை ராணுவம் செய்தது என்றும் ஆவணப்படம் விவரிக்கிறது.

• பாதுகாப்பு வலையத்திற்குள் மக்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் மீது இலங்கை ராணுவம் திட்டமிட்டு கனரக ஆயுதங்களையும் டாங்கிகளையும் செலுத்தி கொல்லப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட்தை சேனல் 4 தொலைக்காட்சி தெளிவாக நமக்கு விளக்குகிறது.

• இதேப்போன்று விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது ஆன பாலச்சந்திரன் கொல்லப்பட்ட சூழலையும் ஆவணப்படம் நமக்கு விளக்குகிறது.
 பாலச்சந்திரன் தவிர பிற அனைவரும் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவருமே கொல்லப்படுவதற்கு முன்பாக ஆடை களையப்பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் அனைவரும் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பின்னந்தலையில் அல்லது முன்நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறுவனான பாலச்சந்திரன் மட்டுமே மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்படி, போர்க்குற்ற ஆதாரங்களை பன்னாட்டு சமூகத்தின் முன் வைத்துள்ள இந்த ஆவணப்படம் , மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க உலக சமூகம் செய்வது என்ன என்பது தான்....!

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் போக்கிலேயே வழிநடத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதையே விரும்பினார்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதை நோக்கியே இலங்கை அரசு செயல்பட்டது.

இந்நிலையில், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு சேனல் 4 வெளியிட்ட ஆதாரங்களே துணைநிற்கின்றன.

இந்தக் குற்றங்கள் தண்டிக்கப்படவில்லையென்றால் ஐ.நா. மன்றம் எதற்காக என்பதே கேள்விக்குறியாகிவிடும்...!

இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை குழுவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்தத் தீர்மானத்தின் மீது வரும் 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு, உலக நாடுகள் நியாயமான முறையில் செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் மனித உரிமைகள் காக்கும் மனசாட்சியுள்ள நாடுகள் உள்ளன என்பது உறுதியாகும்.
ஆனாலும், இந்தியாவின் இசைவு இல்லாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு தீர்வு காணமுடியாது என்பதே தற்போது அசைக்கமுடியாத நிலைப்பாடாக உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழகத்தில் தீவிரமாகி வருகிறது.

இதுகுறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் புயலை கிளப்பியது. இதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, ''எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பது இந்தியா காலம்காலமாக பின்பற்றும் கொள்கை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அது என்றைக்கு விவாதத்துக்கு வரும் என்று தெரியவில்லை.

எனவே, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை காலப்போக்கில் முடிவு செய்து கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் பிரதமர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். உறுப்பினர்கள் விரும்பினால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை விளக்கம் அளிக்கச் சொல்கிறேன்'' என்றார்.
 தனையடுத்து, வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மோதலை வலுப்படுத்துவதையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துவதைவிட, மீண்டும் இணக்கமான சூழலை, பொறுப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில், முன்னோக்கி செல்லும் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். அதற்காக இந்தியா அனைத்து தரப்பினரிடமும் தொடர்பு கொண்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின், 19-வது அமர்வில், இனிதான் முறையான விவாதத்துக்கு வரவுள்ளது. அந்த வரைவு தீர்மானம் பரிசீலனைக்கு வரும் நேரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், நமது நிலையை முடிவு செய்வோம்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினர் சம உரிமை, மதிப்பு, நீதி, சுய மரியாதை பெற்று எதிர்காலத்தில் வாழத்தகுந்த விதத்தில் மத்திய அரசின் முயற்சிகள் தொடரும். அத்தகைய உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில், இந்தியாவின் நடவடிக்கையினால் ஏற்படுகிற விளைவுகள் குறித்து ஆராய வேண்டிய தேவை உள்ளது.

நாம் எடுக்கிற எந்த ஒரு முடிவும் அண்டை நாடான இலங்கையுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவில் விளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், இலங்கையில் நல்லிணக்கமான சூழ்நிலை ஏற்பட உதவுமா, அரசுக்கும், தமிழ்க்கட்சிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையை வலுப்படுத்துமா என்பதையெல்லாம் ஆராய வேண்டி உள்ளது.

அண்மையில் இலங்கையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, அந்த நாட்டு அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தை செயல்படுத்த உறுதி பூண்டிருப்பதாக அரசு தரப்பில் உறுதிமொழி தரப்பட்டது. சேனல் 4 வெளியிட்ட செய்திப்படங்களை பொறுத்தமட்டில், வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு.” என்று கிருஷ்ணா தெரிவித்தார்.
 எஸ்.எம்.கிருஷ்ணாவின் இந்த பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. திமுக உறுப்பினர்கள் கிருஷ்ணாவின் அறிக்கை நகலை கிழித்தெறிந்தனர்.

”ஐ.நா. மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இலங்கை விவகாரத்தில், குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிராக முடிவு எடுப்பது பாரம்பரிய நிலை இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

அதனால் வெளியுறவு அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு திமுக உறுப்பினர் கனிமொழி வெளிநடப்பு செய்தார்.

இதேப்போன்று வெளிநடப்பு செய்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜாவும் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து பேசும்போது, "இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள் குறித்த பிரச்சினையை அமெரிக்கா அல்லது நார்வே எழுப்புகிறவரை இந்தியா ஏன் காத்து இருந்தது? போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினையை எழுப்பிய முதல் நாடாக இந்தியா அல்லவா இருந்திருக்க வேண்டும்?'' என்றார்.

இறுதியில் விவாதத்துக்கு எஸ்.எம். கிருஷ்ணா பதில் அளித்தார். அப்போது அவர், "ஐ.நா. மனித உரிமை குழுவில் விவாதம் வாக்கெடுப்புக்கு வர இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் எவ்வளவோ விஷயங்கள் நடக்க முடியும். நாங்கள் ஆராய்வோம். இதில் இறுதி முடிவு எடுத்த பின்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்

இலங்கையில் போர் நடந்த போது ஆதரவை அள்ளிக்கொடுத்த இந்தியாவுக்கு, அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது முடிவெடுப்பதில் கால அவகாசம் தேவைப்படுவது ஏன் என்பது மனசாட்சி உள்ளவர்களின் கேள்வியாக உள்ளது.

இலங்கை., உலக நாடுகளின் வலையில் சிக்கியதால் தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, இந்தியா ஓடி ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறதா என்பது தான் புரியவில்லை.

சச்சின் சதசதம் வீண்; வங்கதேசம் அபார வெற்றி!

டாக்காவில் நடைபெற்ற இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சினின் 100வது சதத்தை மறக்கடிக்கும் விதமாக வங்கதேசம் மோசமான இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்து அபார வெற்றி பெற்று தங்களது இறுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 138 பந்துகளில் சதம் எடுத்து சதம் எடுக்கும் தறுவாயில் சற்றே மந்தமாக விளையாட இந்தியாவுக்கு 30 ரன்கள் குறைபாடு ஏற்பட்டது. தோனி 11 பந்துகளைச் சந்தித்தார். 21 ரன்களை விளாசினார். ஆனால் அவருக்கு மட்டும் 30 பந்துகள் கிடைத்திருந்தால் மேலும் ஒரு 30 ரன்கள் கிடைத்திருக்கும், வங்கதேசம் வெற்றி கனவாகியிருக்கும்.

இலக்கைத் துரத்திய வங்கதேசம் ஆட்டத்தின் எந்த நேரத்திலும் பதட்டம் காட்டாமல் துரத்தினர். பார்மில் இல்லாத எந்த ஒரு வீரரும், அணியில் இடம்பெறுவோமா மாட்டோமா என்று உள்ள எந்த ஒரு வீரரும் இந்தியாவுடன் விளையாடினால் தங்களது இடத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதற்கு தமீம் இக்பால் ஒரு உதாரணம்.

ந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி அவர் 70 ரன்களை எடுத்தார். நசிமுதீன் விக்கெட்டை துவக்கத்தில் பிரவீண் வீழ்த்தினார். அதோடு சரி, அதன் பிறகு தமீம், ஜஹ்ருல் இஸ்லாம் இணைந்து 24 ஓவர்களில் 113 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஜஹ்ருல் 53 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். 34வது ஓவரில் தமீம் இக்பால் ஆட்டமிழக்க வங்கதேச 156/3 என்று ஆனது. தேவைப்படும் ரன் விகிதம் 16 ஓவர்களில் 133 ஆகும் அதாவது 8 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலை.

ஆனால் அப்போதுதான் ஷாகிப் அல் ஹஸன் புகுந்தார். 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் அவர் 49 ரன்களை விளாசியதோடு நாசிர் ஹுசைனும் இவரும் இணைந்து 8 ஓவர்களில் 68 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஷாகிப், அஷ்வின் பந்தில் ஸ்டம்ப்டு ஆக 42 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 224/4 என்று இருந்தது. 8 ஓவர்களில் 65 ரன்கள் தேவை.

நாசிர் ஹுசைனுடன் கேப்டன் முஷ்பிகுர் இணைந்தார். 46 ஆவது ஓவர் முடிவில் வங்கதேசம் 253/4 என்று இருந்தது. 24 பந்துகளில் 37 ரன்கள் தேவை.

பிரவீண் குமார் வந்தார். 47வது ஓவரில் 4 ரன்களையே அவர் விட்டுக் கொடுக்க வங்கதேசம் 257/4 என்ற நிலையில் கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு வந்தது.

ஆனால் அதற்கு அடுத்த ஓவரில் இர்பான் பத்தான் படு மோசமாக வீச அதாவது 120 கிமீ வேகத்திற்கு மேல் ஒரு பந்தும் இல்லை, யார்க்கர்கள் இல்லை, ஓவர் பிட்ச் அல்லது புல்டாஸ் என்று வீசி 2 சிக்சர்களை முஷ்பிகுர் அடிக்க அந்த ஓவரில் 17 ரன்களை கொடுத்தார்.

அதற்கு அடுத்த 49வது ஓவரை பிரவீண் வீசினார். மீண்டும் நோபாலில் முஷ்பிகுர் பவுண்டரியையும் அதற்கு அடுத்த பந்து அபாரமான சிக்சரையும் அடித்து அந்த ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுக்க. கடைசி ஓவரில் 2 ரன்கள் என்ற நிலை இருந்தது.

டிண்டா வீச அதனை பவுண்டரிக்கு விரட்டினார் மஹ்முதுல்லா இந்தியாவுக்கு வெட்கக் கேடான தோல்வி ஏற்பட்டது. சச்சின் சத சதம் நினைவிலிருந்து அகற்றப்படவேண்டிய இந்தியத் தோல்வியாகப் போய் முடிந்தது.

அஷோக் டிண்டாவை அணியில் எடுத்து விட்டு அவருக்கு 5 ஓவர்கள் மட்டுமே கொடுக்கவேண்டிய நிர்பந்தம் என்னவென்று புரியவில்லை. இன்றைக்கு அஷ்வின் பந்து வீச்சு எடுபடாமல் போனதும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ரைனா 7 ஓவர்களில் 30 ரன்கள் என்று இருக்கும் போது ரோஹித் ஷர்மாவுக்கு 2 ஓவர்களை கொடுக்கவேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. 7 ஓவர்கள் வீசியவர் விக்கெட் எடுப்பாரா அல்லது புதிய வீச்சாளர் விக்கெட் எடுப்பாரா? கடைசியில் பத்தானுக்குப் பதிலாக டிண்டாவுக்கு கொடுத்துப் பார்த்திருக்கலாம் இன்று அவரது தினமாக இருந்திருந்தால்? ஆனால் தோனி ஒரு பயந்தாங்கொள்ளி கேப்டன் என்றே புரிகிறது.
 

Thursday, March 8, 2012

தேசிய விருதுகள் - வருத்தத்தில் முருகதாஸ்

தேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தியிருக்கும் முருகதாஸ் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து தயா‌ரித்த எங்கேயும் எப்போதும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம். ஆனால் இந்தப் படத்துக்கு தேசிய விருது எதுவும் கிடைக்கவில்லை. இது தனக்கு வருத்தமளிப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார் முருகதாஸ்.

துப்பாக்கிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைக்க ட்ரை பண்ணுங்க பாஸ்.

பலாத்கார சர்ச்சையில் ப்‌ரியாமணி

்‌ரியாமணி தேசிய விருது வாங்கிய பிறகும் தமிழ் சினிமா அவ‌ரிடம் மாற்றான் மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது. ஆனால் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் படங்களில் தொடர்ச்சியாக முத்தழகியை பார்க்க முடிகிறது. தமிழில் வாய்ப்பு இல்லாததால் சற்று வருத்தத்தில் இருந்த அவரை வெறுப்படைய வைத்துள்ளது சமீபத்தில் கிளம்பிய பலாத்கார வதந்தி.

செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றியதை சென்னை நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். ஆல்கஹால் ஆறாக ஓடிய இந்தப் பார்ட்டியில் மப்பும் மந்தாரமுமாகவே அனைவரும் காட்சியளித்திருக்கிறார்கள். ப்‌ரியாமணிக்கு மட்டும் ஓவர் டோஸாகிவிட்டதாம்.

அரைகுறை மயக்கத்தில் இருந்தவரை ஐந்து பேர் கும்பல் இஷ்டத்துக்கு விளையாடியதாக பார்ட்டிக்கு மறுநாளே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த‌ச் செய்தி ஹைதராபாத்தை தாண்டி ப்‌ரியாமணியின் காதுகளையும் எட்டியது. அவ்வளவுதான்.. நான் போட்டி முடிஞ்சதுமே ஃபிளையட் ஏறிட்டேன், பார்ட்டியில் கலந்து கொள்ளவே இல்லை. பிறகெப்படி இந்த மாதி‌ரி சீப்பாக வதந்தி கிளப்புகிறார்கள் என்று காதில் புகை வரும் அளவுக்கு பொ‌ரிந்திருக்கிறார்.

இனி தமிழில் நடிக்கக் கூப்பிட்டாலும் சென்னைக்கு வருவாரா என்பது சந்தேகம்தான்.

Wednesday, March 7, 2012

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

59வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்தமுறை தமிழுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன.

FILE
இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. குமாரராஜா தியாகராஜனுக்கு நமது மனப்பூர்வமான பாராட்டுகள். மேலும் சிறந்த எடிட்டிங்குக்கான விருதுக்கும் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரவீண் இந்த விருதைப் பெறுகிறார்.

சிறந்தப் பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான விருதை சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை வென்றுள்ளது. பாஸ்கர் சக்தியின் கதையைதான் சுசீந்திரன் அதே பெய‌ரில் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறுகிறார்.

சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான பி‌ரிவில் வாகை சூட வா விருது வென்றிருக்கிறது. மற்ற விருதுகள் மற்றும் ப‌ரிசுத் தொகை...

Best Feature Film: Shared by Deool (Marathi) and Byari (Byari)

Deool
Producer: Abhijeet Gholap
Director : Umesh VinayakKulkarni
Byari (Byari)
Producer: T.H. AlthafHussain
Director :Suveeran
SwarnaKamal: Rs.2,50,000/-

Indira Gandhi Award For Best Debut Film of a Director: Aaranyakandam (Tamil)

Producer:S.P.Charan
Director :Kumararaja Thiagarajan
SwarnaKamal: Rs.1,25,000/

Award for Best Popular Film Providing Wholesome Entertainment: AzhagarsamiyinKuthirai (Tamil)
Producer: P. Madan
Director :Suseentharan
SwarnaKamal: Rs.2,00,000/-

Best Children’s Film: Chillar Party(Hindi)
Producer: UTV Software Communications Ltd
Director : VikasBahl & Nitesh Tiwari
SwarnaKamal: Rs.1,50,000/-

Best Direction: GurvinderSingh for Anhe Ghorey Da Daan (Punjabi)
SwarnaKamal: Rs. 2,50,000/-

Best Actor: Girish Kulkarni for Deool (Marathi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Actress: Vidya Balan for The Dirty Picture (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Supporting Actress: Leishangthem Tonthoingambi Devi for Phijigee Mani(Manipuri)
Rajat Kamal: Rs.50,000/-

Best Child Artist (Shared): Partho Gupte for Stanley ka Dabba (Hindi)
Irrfan Khan, Sanath Menon, Rohan Grover, Naman Jain, Aarav Khanna, Vishesh Tiwari, ChinmaiChandranshuh, Vedant Desai, Divij Handa and Shriya Sharma for Chillar Party(Hindi)
Rajat Kamal: Rs.50,000/-
 Best Male Playback Singer: Anand Bhate for Balgandharva(Marathi)
Rajat Kamal: Rs.50,000/-

Best Female Playback Singer: RoopaGanguly for Abosheyshey (Bengali)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Cinematography: Anhe Ghorey DaDaan (Punjabi)
Cameraman: Satya RaiNagpaul

Laboratory: Reliance Media Works
Rajat Kamal: Rs.50,000/-

Best Screenplay
Screenplay Writer (Original): Vikas Behl & Manish Tiwari for Chillar Party(Hindi)
Rajat Kamal: Rs.50,000/-

Screenplay Writer (Adapted): Avinash Deshpande Nigdi for Shala (Marathi)
Rajat Kamal: Rs.50,000/-

Dialogues: Girish Kulkarni for Deool (Marathi)
Rajat Kamal: Rs.50,000/-

Best Audiography
Location Sound Recordist: Baylon Fonseca for Zindagi NaMilegi Dobara (Hindi)
Rajat Kamal: Rs.50,000/-

Sound Designer: Baylon Fonseca for Game (Hindi)
Rajat Kamal: Rs.50,000/-

Re-recordist of the final mixed track: Hitendra Ghosh for Game (Hindi)
Rajat Kamal: Rs.50,000/-

Best Editing: Pravin KL for Aaranyakandam (Tamil)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Production Design: Indraneel Ghosh for Naukadubi (Bengali)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Costume Designer (Shared): Neeta Lulla for Balgandharva (Marathi)
Niharika Khan: The Dirty Picture (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Make-Up Artist: VikramGayakwad for Balgandharva (Marathi) and The Dirty Picture (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Music Direction
Songs: Neel Dutt for Ranjana Ami Ar Ashbo Na (Bengali)
Rajat Kamal: Rs. 50,000/-

Background Score: Mayookh Bhaumik for Laptop (Bengali)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Lyrics: Amitabh Bhattacharya for ‘Agar Zindagi’ in I AM (Hindi)

Special Jury Award: Anjan Dutt for Ranjana Ami Ar Ashbo Na (Bengali)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Special Effects: Harry Hingorani and Keitan Yadav for Ra. One (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-

Best Choreography: Bosco and Caeser for ‘Senorita’ from Zindagi Na Milegi Dobara (Hindi)
Rajat Kamal: Rs. 50,000/-
thanks webdunia

Monday, March 5, 2012

ஸ்ரோயாவை சூடாக்கிய தயா‌ரிப்பாளர்

ஸ்ரேயாவுக்கும் சேர நாட்டுக்கும் செட்டாவதேயில்லை. எப்படி டியூன் செய்தாலும் ஒரே கர்ர்ர்... புர்ர்ர்... சத்தம்தான்.

மோகன்லால் ஜோடியாக ஸ்ரேயா காஸனோவா என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் இதுதான் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய படம் பல வருடங்கள் ஜவ்வாக இழுத்து ஒருவழியாக வெளியாகி, இந்த வருடத்தின் மொக்கைப் படங்களில் ஒன்று என பெயர் வாங்கியது.

இதற்கு முன்னால் இன்னொரு சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் போக்கி‌ரிராஜஎன்ற படத்தில் நடித்தார். இதில் மம்முட்டியின் தம்பி பிருத்விரா‌ஜின் காதலியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. சூப்பர் மொக்கையான இந்தப் படத்தை ராஜா போக்கி‌ரி ராஜஎன்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதுதான் பிரச்சனை.

போக்கி‌ரிராஜாவில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது தயா‌ரிப்பாளருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டாராம் ஸ்ரேயா. அதாவது போக்கி‌ரிராஜாவை வேறு மொழிகளில் டப் செய்யக் கூடாது என்பதுதான் அது. அதை மீறி தயா‌ரிப்பாளர் இப்போது படத்தை தமிழில் வெளியிடுகிறார். இதனால் சூடாகிப் போன ஸ்ரேயா நடிகர் சங்கத்தில் இது குறித்து புகார் தெ‌ரிவித்துள்ளார்.

ச‌ரி, போக்கி‌ரிராஜாவை தமிழில் வெளியிட்டால் என்னவாகிடப் போகிறது? ஸ்ரேயா ஏன் இதற்கு பதற்றப்பட வேண்டும்? ஓவர் கவர்ச்சியில் நடித்திருக்கிறாரா?

அதெல்லாம் இல்லை. மம்முட்டி, பிருத்விரா‌ஜ் பில்டப்புகளுக்கு நடுவில் ஸ்ரேயாவின் வேடம் சின்ன பிட்டாக சுருங்கிவிட்டது. இதனால்தான் தனி ஹீரோயினாக நடிக்கும் தமிழில் இப்படம் வரக்கூடாது என்கிறார் ஸ்ரேயா. படமோ, வேஷமோ... பிட் என்றாலே பிரச்சனைதான்.

Sunday, March 4, 2012

ரஷ்ய அ‌திபரானா‌ர் ‌விளாடி‌மி‌ர் புடி‌ன்

 
ர‌ஷ்ய அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் ‌விளாடி‌மி‌ர் பு‌டி‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ ‌மீ‌ண்டு‌ம் அ‌திபராக பெறு‌ப்பே‌ற்க ‌உ‌ள்ளா‌ர்.

ரஷ்அதிபரதேர்தலில், தற்போதைபிரதமரவிளாடிமிரபுடின், கம்யூனிஸ்டகட்சியைசசேர்ந்த கெ‌ன்னடி, கோடீஸ்வரரான ‌மி‌க்கெ‌ல் உள்ளிட்டோர் போ‌ட்டி‌யி‌‌ட்டன‌ர்.

மாஸ்கோ, செயின்டபீட்டர்ஸ்பர்க், விளாடி வாஸ்டாகஉள்பஅனைத்துபபகுதிகளிலுமநே‌ற்று ஒரகட்டமாவாக்குப்பதிவநடைபெ‌ற்றது. ப‌திவான வா‌க்கு‌க‌ள் உடனடியாக எ‌ண்ண‌ப்ப‌ட்டு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதில், விளாடிமிரபுடினபெரும்பான்மவாக்குகளபெற்றவெற்றி வெ‌ற்று‌ள்ளா‌ர். ஆனா‌ல் முறைகேடு செ‌ய்து பு‌தி‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளதாக எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன.