Tuesday, January 10, 2012

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட்டார்

ராமேஸ்வரம்: ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம். பெரும்பாலும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு அடிக்கடி வருவார்.

இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட ராமேஸ்வரம் வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம் நடத்தினர்.

கோவிலுக்கு வரக் கூடாது, தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீஸார் குறுக்கிட்டு நடேசனையும், அவரது குழந்தைகளையும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செனறனர்.


0 comments:

Post a Comment