தொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

வேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :

பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் வேட்டை அதில் ஒரு காட்சியில் தம்பிராமாய மாதவனை பார்த்து போலீஸ் வேலைக...

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபை...

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!

பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

59வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுப் பட்டியல்

இதில் முக்கியமான விருது சிறந்த முதல் பட இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது. இந்த விருதுக்கு ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாக்கி ஷெராஃப், சம்பத் நடித்திருந்த இந்தப் படம் தமிழின் மிக முக்கிய திரைப்படம் என விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

Wednesday, February 22, 2012

விஜய் அளித்த பார்ட்டி

சுமாரான கூட்டம், சூப்பரான கொண்டாட்டம் என இந்த வருட செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் நிறைவாக முடிந்திருக்கிறது. தமிழக அணியை பொறுத்தவரை மைதானத்துக்கு வெளியே அனைவரையும் கவர்ந்தது மகனுடன் வந்து வீரர்களை உற்சாகப்படுத்திய விஜய்.

தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ந்து போன விஜய் அணி வீரர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை அரேஞ்ச் செய்தார். இதில் அணி வீரர்களுடன் திரையுலக பிரபலங்களும் கலற்து கொண்டனர்.

அடுத்தமுறை நீங்களே கேப்டனாயிடுங்க தளபதி.

Tuesday, February 21, 2012

மூத்த வீரர்கள் மந்தமா? 'தோனி கூறியது தெரியாதே'- சேவாக்

துவக்க வீரர்களை சுழற்சி முறையில் ஆடவைப்பதன் காரணம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத்தான் என்று சேவாக் உள்ளிட்டோர் கூறினாலும் தோனியே கூட அதனை அணி நிர்வாகத்தின் ஒட்டு மொத்த முடிவு என்று கூறினாலும், கடைசியில் முதல் 3 வீரர்களை சுழற்சி முறைக்கு ஆட்படுத்தியது ஃபீல்டிங்கில் 20 ரன்களை மிச்சம் செய்ய முடிகிறது என்று தோனி அன்று கூறியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மூத்த வீரர்களின் மந்தமான பீல்டிங்கினால் 20 ரன்கள் அதிகம் கொடுக்கிறோம் என்று தோனி கூறியது தனக்குத் தெரியாது என்று சேவாக் இன்று கூறியுள்ளார்.

இது குறித்து சேவாக் கூறுகையில், துவக்க வீரர்களை சுழற்சி முறையில் ஆட வைப்பது குறித்து தோனி, என்னிடம், சச்சினிடம், கம்பீரிடம் தனித்தனியாக பேசினார். அப்போது அடுத்த உலகக் கோப்பை இங்கு நடைபெறுவதால் இந்த பிட்சில் இவர்கள் அனுபவம் பெறவேண்டும் என்றார், அது சரியாகவே பட்டது தானும் அதுபோன்ற ஒரு கருத்தில் இருந்ததால் அதனை எற்றதாகவும் சேவாக் கூறினார்.

"அவர் மந்தம் பற்றி குறிப்பிட்டது தெரியாது, அவர் என்ன கூறினார், மீடியாவில் என்ன போய்க் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது" என்றார் சேவாக்.

அதேபோல் 3 துவக்க வீரர்களை 11-இல் வைப்பது அவ்வளவு இயலாத காரியமா? என்று கேட்டதற்கு, "அப்படியல்ல என்று நினைக்கிறேன், உலகக் கோப்பையில் நாங்கள் மூவரும் விளையாடினோம் போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றோம். நாங்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம், எந்த ஒரு அணியிலும் வீரர்களை சுழ்ற்சி முறையில் விளையாடவைப்பது நல்லதே.

தோனியின் ஃபீல்டிங் மந்தம் கருத்து பற்றி கூறிய சேவாக், "இன்று எனது கேட்சை பார்த்தீர்களா?" என்று இன்று ஜெயவர்தஏயிற்கு டைவ் அடித்து ஒருகையால் கேட்ச் எடுத்ததையே சேவாக் இவ்வாறு குறிப்பிட்டார்.

20 ரன்களை இளம் வீரர்கள் மிச்சப்படுத்துவார்கள் என்றால், அவர்கள் தொடர்ந்து பேட்டிங்கில் தோல்வியடைந்தாலும் அணியில் நீடிக்கவேண்டுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சேவாக், ச்கிண்டலா, சீரியசா என்று புரியாதவண்ணம், "நீங்கள் தோனியிடம்தான் மீண்டும் கேட்கவேண்டும், அவர் எங்களிடம் கூறியது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பதே. அவர்கள் இங்கு வந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடவேண்டும், இதுதான் தோனி எங்களிடம் கூறியது.

இப்போது தோனியிடம் பேசுவீர்களா? நான் எதுக்குப் பேசவேண்டும், அவர் அணித் தலைவர், அவரும் பயிற்சீயாளரும் முதல் கள வீரர்கள் வரிசையில் பிரேக்குகள் வேண்டுமென்றால் அது எனக்கு சரியானதாகவே படுகிறது. எனக்கு அதில் ஒன்றும் சர்ச்சைகள் இல்லை.

நான் அனைத்துப் போட்டிகளுக்கும் உடற்தகுதியுடந்தான் இருந்தேன், ஆனால் பயிற்சியாளர், கேப்டன் இவர்களே விளையாடும் 11-ஐத் தேர்வு செய்யவேண்டும். அவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று கூறினால் எனக்கு இந்த இடைவெளி மகிழ்ச்சியஏ.

தோனியிடன் கடந்த உலகக் கோப்பைக்கு முன்பே நானே கூறினேன், கோலி, ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த உலகக் கோப்பைக்கு முன்பு குறைந்தக்டு 100 ஒருநாள் போட்டிகளிலாவது பங்கேற்கவேண்டும் என்று, இது ஒரு நல்ல சிந்தனைதான் என்றார் சேவாக்.

அணியில் பிளவு இல்லை, நாங்கள் சிறப்பாகவே ஒரு அணியாக மகிழ்ச்சியாக இர்க்கிறோம் என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் தொடர்புபடுத்துவதில் உள்ள சிக்கலையே மேற்கூறிய விஷயங்கள் காட்டுகிறது.

போட்டியை கடைசி ஓவர் வரை இழுக்கக்கூடாது என்கிறார் கம்பீர், அடுத்த நாளே தோனி முதல் வரிசை வீரர்களே போட்டியை வென்றிருக்கவேண்டும் என்கிறார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிறார் தோனி பிறகு முதல் 3 வீரர்களை மாற்றுவதன் மூலம் 20 ரன்கள் மீசப்படுத்துகிறோம் என்கிறார்.

உண்மையில் சேவாக், சச்சின், தோனி இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

சென்னை பாக்ஸ் ஆஃ‌பி‌ஸ்

5. தோனி
நல்ல படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் தோனிக்கு ரசிகர்களின் வரவேற்பு சுமார்தான். சென்ற வார இறுதியில் 6.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 64 லட்சங்களை வசூலித்து டாப் 5இல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4. அம்புலி
3D படமான அம்புலியில் பார்த்திபன் தவிர்த்து வேறு தெ‌ரிந்த முகங்கள் இல்லை. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 7.7 லட்சங்கள் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் வசூல் அதிக‌ரிக்கும் என நம்பப்படுகிறது.

3. மெ‌ரினா
முதலிடத்தில் இருந்த மெ‌ரினா மூன்றாவது இடத்துக்கு கீழிறங்கியிருக்கிறது. இதுவரை சென்னையில் 1.78 கோடி வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் 10.5 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. முப்பொழுதும் உன் கற்பனைகள்
பெரும் பொருட் செலவில் தயாராகியிருக்கும் இப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. என்றாலும் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு காரணமாக முதல் மூன்று தினங்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. வசூல் 43 லட்சங்கள்.

1. காதலில் சொதப்புவது எப்படி
இந்த ரொமாண்டிக் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சில ல‌ட்ச‌ங்க‌ள் வித்தியாசத்தில் இப்படம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 49.7 லட்சங்கள்.

விபச்சாரத் தொழில்: சென்னையில் பிரபல அம்மா நடிகை கைது!

சென்னையில் நீண்டகாலமாக நடந்து வரும் துணைநடிகைகளை வைத்து விபச்சாரம் செய்தல் விவகாரத்தில் 40வயதான பிரபல அம்மா நடிகை சோபனா கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து உட்கார்ந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து உல்லாச விருந்து படைப்பதாக போலீசுக்கு ரகசிய புகார் வந்தது.

பிரபல அம்மா நடிகை சோபனா இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் கண்டறியப்பட்டது.

இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை நியமிக்கப்பட்டது.

அம்மா நடிகையிடம் போலீஸார் போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் போல் பேசினர். போலீசார் விரித்த வலையில் சோபனா சிக்கினார்.

பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா-தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர்.

நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அடுத்து அக்கா-தங்கை இருவரும் பிடிபட்டனர்.

சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அக்கா-தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
thanks:webdunia

Monday, February 20, 2012

அனன்யாவின் அன் லிமிடெட் லவ்

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹோம்லி டைப் அனன்யா. அதனால்தான் காதலித்து கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறி, பெற்றோர் பார்த்த தொழிலதிபர் ஆஞ்சநேயனை மணக்க சம்மதித்தார். ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று நிச்சயதார்த்தத்துக்கு பிறகே தெ‌ரிய வந்து அனன்யாவின் அப்பா அவர் மீது போலீஸில் புகார் தந்தார். இதெல்லாம் அனைவரும் அறிந்த பிளாஷ்பேக்.

இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக அனன்யா வாய் திறந்திருக்கிறார்.

அதாகப்பட்டது, அனன்யாவை அவரது பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகச் சொன்னது பொய்யாம். அதேபோல் ஆஞ்சநேயன் மீது வேண்டுமென்றே அவதூறாக களங்கம் கற்பிக்கிறார்களாம். அதையெல்லாம் பொய் என்று நிரூபித்து, பிரச்சனைகள் அடங்கிய பின் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொள்வாராம். ஆஞ்சநேயன்தான் என் புருஷன் என்பதில் சந்தேகமில்லை என்று தொடை தட்டாத குறையாக சத்தியம் செய்திருக்கிறார் அனன்யா.

இந்த விளக்கத்தில் ஆஞ்சநேயனின் முதல் திருமணம் பற்றியோ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறித்தோ அனன்யா எதுவும் தெ‌ரிவிக்கவில்லை. ஆஞ்சநேயன் மீது அனன்யாவுக்கு அவ்ளோ காதல்.

காதலில் சொதப்புவது எப்படி – திரை விமர்சனம்

ஒய் நாட் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காதலில் சொதப்புவது எப்படி. படத்தின் பெயர்தான் இப்படத்தின் ஒருவரிக்கதை.
அருணாக வரும் சித்தார்த்தும் பார்வதியாக வரும் அமலா பாலும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். சில சந்திப்புகளில் இருவருக்கும் பிடித்துப்போகவே நண்பர்களாக பழகி வருகிறார்கள். அருண் குடும்பம் மிகவும் இனிமையான குடும்பம்.
சந்தோசத்தின் பிறப்பிடம் என அருண் வீட்டை சொல்லலாம். அப்பா வக்கீல். அம்மா ஹவுஸ்வொய்பாக இருக்கிறார். இவர்களது செல்லப்பிள்ளையாக அருண். பார்வதியுடன் அருண் நட்புக்கொண்டிருப்பதை கண்டு இருவரும் மகிழ்கின்றனர். இதனிடையே அருண்-பார்வதி நட்பு காதலாக மாறுகிறது.
பார்வதி வீடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இவரது அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகளால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள். இந்நிலையில் தனித்து விடப்படும் பார்வதி அருணின் அன்பை நாட, அருணோ அவரை அறியாமல் பார்வதியை தவிர்த்து விடுகிறார். இதற்கு முன் சிறு சிறு சொதப்பல்களால் சண்டையிட்டு பின் சேர்ந்து கொண்டாலும் இந்த நிகழ்வால் பார்வதி அருணை விட்டு பிரிந்து விடுகிறார்.
சொதப்பலில் விழுந்த அருண்- பார்வதி காதல் என்ன ஆனது? பார்வதியின் பெற்றோர்கள் நிலை என்ன ஆனது? என்பதை சொல்லி சுபம் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனரான பாலாஜி மோகன். அருண் என்ற கேரக்டரில் வரும் சித்தார்த் அப்பிராணி காதலன் வேடத்தில் அசத்துகிறார். காதலி பிரிந்து விட்டாளே.
அதை மறக்க என்ன செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்களில் 75 சதவீதம் பேர் தண்ணியடிக்க சொல்கின்றனர். அப்போது ”ஏற்கனவே என் இதயம் டேமேஜ் ஆயிடிச்சி, இதனால் என் கிட்னியையும் டேமேஜ் செஞ்சுக்க விரும்பல” எனும்போது பளிச்சென மனதில் நிற்கிறார். பார்வதியாக வரும் அமலாபால் கல்லூரி மாணவி பாத்திரத்தில் கச்சிதமாய பொருந்துகிறார்.
தன் அம்மாவிடம் ”நான் இருக்கறதையே நீங்க ரெண்டு பேரும் மறந்துட்டீங்களே. விவாகரத்து கேட்க போறீங்கண்ணு என்னிடம் ஏம்மா கேட்கல” என உடைந்து அழும்போது மனம் கனத்துப்போகிறது. காதல் செய்வதை விட காதலனுடன் இவருக்கு நன்றாக சண்டைபோட வருகிறது. காதல் காட்சிகளில் இன்னும் நடித்திருக்கலாமோ என கேட்கத் தோன்றுகிறது.
சித்தார்தின் அப்பா அம்மாவாக வரும் ராகவேந்தர்- சிவரஞ்சனி ஜோடி சரியான தேர்வு. அப்பாத்திரமாகவே வாழ்ந்து அசத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு அப்பா அம்மாவா என ரசிக்க வைத்திருக்கிறார்கள். அமலாபால் அப்பா அம்மாவாக வரும் சுரேஷ்- சுரேகா ஆகியோர் நடிப்பு பிரமாதம். தலைக்குமேல் வளர்ந்த மகள் இருக்கும் போது இவர்களுடைய காதலில் சொதப்புவதாகட்டும் மீண்டும் இணைவதாகட்டும் அனைத்தும் கிளாப் ரகம். காமெடிக்கு சித்தார்தின் நண்பர்களாக வரும் அர்ஜினும், சிவாவும் படத்தில் ஆங்காங்கே மொக்கையும் அறையும் வாங்கி நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
இயக்குனர் பாலாஜி மோகனின் வசனங்கள் சில இடத்தில் பளிச் ரகம். சுரேஷ் “தன் மனைவி பற்றி அமலாபாலிடம் ”இந்த உலகத்துல யாருமே ‘மேட் பார் ஈச் அதர்’ இல்லமா. நமக்கு பிடிச்சவங்களுக்காக நாம மாத்திக்கனும். அப்போ ‘மேட் பார் ஈச் அதர்’ ஆகிடும்மா” என்பார். அமலாபால் கண்ணீர் விடுவதைப் பார்த்து விட்ட சித்தார்த் ”பெண்களிடம் இருக்கும் பெரிய ஆயுதமே, அவங்களேடா டேமை உடைக்கறதுதான்…” என சொல்கையில் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறார்.
சுரேஷ் தனது மனைவியை அரவது மாமனாரின் 80வது கல்யாணத்தில் சந்திக்கும்போது இளையராஜாவின் ‘வளையோசை சலசலவென…’ பாடல் பின்னணியில் ஒலிக்கும் போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. தன் மகளிடமே தனது மனைவிக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டு கம்பீரமாக சுரேஷ் நடந்து வரும்போது நீரவ்ஷாவின் கேமரா கவிதை படிக்கிறது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தில் தமனின் பின்னணி இசை அருமை. அழைப்பாயா.. அழைப்பாயா… பாடல் நன்றாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களை காதல் செய்பவர்களை மையப்படுத்தி சண்டைக்காட்சி இல்லாமல் கொலை இரத்தம் இல்லாமல் வில்லன் இல்லாமல் இப்படத்தை இயக்கிய பாலாஜி மோகனை பாராட்டலாம்.
ஆனால் படத்தில் டாகுமெண்டரி போல் சில காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு தொய்வை உண்டாக்குகிறது. மற்றபடி காதலிப்பவர்களுக்கும், காதலித்தவர்களுக்கும், காதலிக்க இருப்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கும்.

இன்டர்நெட்டில் ‘பிட்’ பட ரேஞ்சுக்கு பரவும் பில்லா 2 ஸ்டில்கள்!

இணையதளங்களில் கடந்த சில தினங்களாகவே பில்லா-2 பட ஸ்டில்களைப் பார்க்க முடிகிறது.
ஆனால் இவை முறையாக வெளியானவை அல்ல. படத்தில் விபச்சார விடுதியில் நடக்கும் ஒரு காட்சியை அப்படியே லீக் செய்திருக்கிறார்கள் இணையத்தில்.
ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜீத் இருப்பது போன்ற காட்சி என கிட்டத்தட்ட பிட்டு பட ரேஞ்சுக்கு அந்தக் காட்சிகள் உள்ளன.
இதனைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் படு காட்டமாகிவிட்டனர். உண்மையிலேயே இவை பில்லா ஸ்டில்கள்தானா… இவை உண்மையென்றால் படம் எப்படியிருக்குமோ என பயமாக உள்ளதே என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டன இந்த ஸ்டில்கள்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.
இந்த ஸ்டில்களை நாங்கள் வெளியிடவே இல்லை. யாரோ இணையதளத்தில் லீக் செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார

பாணியை மாற்றும் விஜய்

பஞ்ச் டயலாக் பேசுவது ,பறந்து பறந்து சண்டை போடுவது என்று ,அனல் பறக்க நடித்த படங்கள் வெற்றி பெறாதலால் ,நண்பன் படத்துக்கு பின், ரூட்டை மாற்றுகிறார் விஜய்,மேலும்,இனி எந்த  படமாக இருந்தாலும் ,கதைக்கேற்ப அடக்க ஒடுக்கமாக நடிக்க அவர் முடிவு எடித்திருபதல் ,சில பிரபல இயக்குனர்கள் ,விஜய்காக வித்தியாசமான கதைகள் உருவாகும் பணியில் இறங்கியுள்ளன.

வருடம் ஒரு படம்:அஜீத்

வருடதிற்கு ஒரு படம் என்பதில் தெளிவாக இருக்கிறார்,அஜீத்.
பில்லா 2 படத்தை முடித்த கையோடுவிஷ்ணுவர்தன் இயக்கும் படத்துக்கு வருகிறார்.ஒரு சமயத்தில் ஒரு படம் என்பதால் கதையில் முலுகவனம் செலுத்த முடிகிறது என்பது இவர் வாதம்.

கொஞ்சும் கோபம்:சற்குணம் ,விக்ரம் ....

களவாணி சற்குணம் தனது புதிய படாத்திற்கு விக்ரம்  நடிக்கிறார் .இந்த படாதிற்கு அவர் வைத்திற்கும் பெயர்
கோபத்தை கொஞ்சுகிறேன்.


கோபத்தை எப்படிதான் கொஞ்ச போரங்களோ................

ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்த‌ே‌ர்த‌லி‌‌ல் வெ‌ற்‌றி உறு‌தி - அழ‌கி‌ரி சொ‌ல்‌கிறா‌ர்

'ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. வெ‌ற்ற‌ி பெறு‌ம்'' எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்சரு‌‌ம், தெ‌ன் ம‌ண்டல ‌தி.மு.க. அமை‌ப்பு செயல‌ர் மு.க.அழ‌கி‌ரி கூ‌‌றினா‌‌ர்.

மதுரை‌யி‌ல் இ‌ன்று மறை‌ந்த ‌தி.மு.க. அமை‌‌ப்பு செயல‌ர் தெ‌ன்னரசு ‌பிற‌ந்தநா‌ள் ‌விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்டு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய போது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

‌‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் ஜவஹ‌ர் சூ‌ரியகுமா‌ர் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்வா‌ர் எ‌ன்று அழ‌கி‌ரி கூ‌றினா‌ர்.

ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் தே‌ர்தலை ம‌ே‌ற்பா‌ர்வை‌யி‌ட்டு ப‌ணியா‌ற்ற ‌உ‌ள்ளதாவு‌ம் அழ‌கி‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அடுத்த மாதம் சிபிஆர் 150ஆர் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா

பைக் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியுள்ள சிபிஆர் 150ஆர் பைக்கை அடுத்த மாதம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்திலிருந்து பிரிந்த பின் நம்பர் ஒன் இடத்தை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது.

இதன் பயனாக, கடந்த ஆண்டு இறுதியில் இருசக்கர வாகன விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, இரண்டாம் இடத்திலுள்ள பஜாஜ் ஆட்டோவின் விற்பனையை விஞ்ச திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கேடிஎம் டியூக் நேக்டு ஐ ஸ்போர்ட்ஸ் பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், கேடிஎம் டியூக் பைக்குக்கு போட்டியாக தனது சிபிஆர் 150 ஆர் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹோண்டா அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

சிபிஆர் வரிசையில் ஏற்கனவே 250 சிசி மோட்டார்சைக்கிளை ரூ.1.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ரூ.1.17 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள கேடிஎம் டியூக் பைக்குக்கு போட்டியாக ரூ.1.15 லட்சம் விலையில் சிபிஆர் 150ஆர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source:oneindia

இரு வரி கவிதை:


முடியும் என்று நீ  நீனைதால் முயற்சி எடு !

முடியாது என்று நீ  நீனைதால் பயிற்சி எடு !
                               
                                 -மேதை காமராஜ்
                                        

ஏக் தீவானா தா - கௌதமை கலாய்க்கும் மும்பை ஊடகங்கள்

கௌதம் வாசுதேவ மேனனின் ஏக் தீவானா தா நேற்று வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌‌ரீமேக்கான இதனை மும்பை ஊடகங்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் மிக மோசமானது.

விண்ணைத்தாண்டி வருவாயா தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்ற படம். ஒரு மொழியில் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் வெற்றிபெறும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் கலா‌ச்சார வித்தியாசத்தில் அப்படம் ஜனங்களுக்குப் பிடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் குஷி தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அதே படம் இந்தியில் தோல்வியடைந்தது. இடுப்பைப் பார்த்ததால் ஏற்படும் காதலர்களின் ஈகோ யுத்தம் தமிழுக்கும், தெலுங்குக்கும் உறுத்தாமல் இருந்தது. இந்தியில் அது எடுபடவில்லை. இடுப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதை பார்ப்பது தவறுமில்லை.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சில அம்சங்கள் மாடர்ன் மும்பைக்கு பொருந்தக் கூடியதல்ல. கதாநாயகியைவிட நாயகன் ஒரு வயது சிறியவன் என்பதும், விருப்பம் இருந்தும் நாயகி நாயகனுடன் செல்லாமல் அவனை தவிர்ப்பதும், இதெல்லாம் ஒரு காரணமா என்று நினைக்க வைப்பவை. இடைவேளைக்குப் பின் கதாநாயகியை பிடித்தாட்டும் குழப்பம் எந்த மொழி ரசிகனுக்கும் சிறிது எ‌ரிச்சலை தரவே செய்யும்.

இவையெல்லாம் ஏக் தீவானா தா படத்தின் சிறு குறைகள். ஆனால் இதனை மும்பை ஊடகங்கள் அளவுக்கதிகமாக‌பெ‌ரிதுப்படுத்தியுள்ளன என்றே தோன்றுகிறது. இந்த இடத்தில் தமிழ் கலைஞர்களின் மீது அவர்கள் காட்டும் காழ்ப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். தமிழகலைஞர்களையும், அவர்கள் படங்களையும் பாலிவுட் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டாலும் மும்பை ஊடகங்கள் அதனை ஒத்துக் கொள்வதாய் இல்லை. தமிழிலிருந்து செல்லும் ஒருவனை மட்டம் தட்ட அவை எப்போதும் தயாராக உள்ளன. விதிவிலக்கு ரஹ்மான். ரஹ்மானின் சர்வதேச புகழ் எளிதில் அவர் மீது கை வைக்கும் துணிச்சலை மும்பை ஊடகங்களுக்கு தருவதில்லை.

ஆனால் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய பலரும் ரஹ்மானின் இசை ஒன்றுமில்லை என்ற ‌ரீதியில் எழுதியுள்ளனர். அதேபோல் கௌதமை மட்டம் தட்டுவதற்காக Mediocre Maniratnam Stuff என்று எழுதுகிறார் ஒருவர். கௌதமின் படத்தில் ஒளிப்பதிவு எப்படி இருக்கும் என்பது நமக்கு‌த் தெ‌ரியும். ஏக் தீவானா தா படத்தின் சிறப்பம்சங்களாக இணைய விமர்சகர் ஒருவர் ஒளிப்பதிவை குறிப்பிடுகிறார். இன்னொருவர் ஒளிப்பதிவை அமெச்சூர் என வர்ணிக்கிறார். 
 இன்னொரு பெண் விமர்சகர் படத்தை விட்டுவிட்டு நாயகியின் உடை எப்படி இருக்க வேண்டும், தோல் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுகிறார். அந்த விமர்சனம் முழுக்க ஒரே உளறல். எமி ஜாக்சனின் தோல் நிறத்தை டி‌ஜிட்டலில் மாற்றியிருப்பதாக அவர் எழுதுகிறார். எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்கார பெண் என்பதுகூட அவருக்கு‌த் தெ‌ரியவில்லை. அதேபோல் தென்னிந்திய பெண்கள் எண்ணெய் தேய்த்து முடியை ஜடை போட்டிருப்பார்கள் அல்லது கொண்டை போட்டிருப்பார்கள். அப்படி இல்லாமல் மலையாளப் பெண்ணாக வரும் எமி ஜாக்சன் தலைமுடியை மும்பை பெண்களைப் போல் பறக்க விட்டிருக்கிறார் என இன்னொரு உளறல். இவர்கள் இருப்பது ஆப்பி‌ரிக்காவிலா இல்லை இந்தியாவிலா? தென்னிந்திய பெண்கள் ஷாம்பு பயன்படுத்த மாட்டார்கள் என்ற அளவில்தான் இவர்களின் உலக அறிவு இருக்கிறது. இவர் அப்படத்துக்கு தந்திருப்பது ஒரு ஸ்டார். இன்னொரு விமர்சகர் மைனஸ் ஒரு ஸ்டார் தந்திருக்கிறார். இப்படியொரு ரேட்டிங் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.

மும்பை சினிமா மல்டி பிளிக்ஸ்களை நம்பத் தொடங்கிய பிறகு அவற்றின் முகமே மாறிவிட்டது. அதீத காமம், அதீத வன்முறை என்று மென்மையான உணர்வுகளை அவர்கள் இழந்து வருகிறார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற படங்களே இதற்கு சான்று. காதலைச் சொல்ல ஒருவன் தயங்குவது அவர்களைப் பொறுத்தவரை பேடித்தனமாக‌த் தெ‌ரிகிறது. அதே நேரம் முன் பின் தெ‌ரியாத ஒருவனுடன் நாயகி படுக்கையை பகிர்ந்து கொண்டால் அவள் மாடர்ன் கேர்ள், 21ஆம் நூற்றாண்டின் நாக‌‌ரிக மங்கை. நான்கு ஸ்டார் ரேட்டிங் தாராளமாகக் கிடைக்கும். இந்த போலியான உலகத்திற்குள் இருப்பவர்களால் தென்னிந்திய பெண்கள் எண்ணைய் தலையுடன்தான் தி‌ரிவார்கள், தோலை டி‌ஜிட்டலில் ஆல்டர் செய்திருக்கிறார்கள் என்று கற்பனை பிம்பத்தில்தான் கதைவிட முடியும். எதார்த்தத்தை இவர்களால் ஒருபோதும் த‌ரிசிக்க முடியாது.

பின் குறிப்பு - இந்தியில் டோபி காட், யுடான் போன்ற நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் இதில் குறிப்பிடுவது கமர்ஷியல் படங்களைத்தானே தவிர இவற்றையல்ல. மேலும் இந்த விமர்சகர்கள் ஏக் தீவானா தா மோசம் என்று காட்டுவதற்கு உதாரணம் சொல்வது டோபி காட், யுடான் போன்ற படங்களையல்ல. யாஷ் சோப்ரா போன்றவர்களின் சைக்கோ படங்களையே.

Monday, February 13, 2012

அனைவருக்கும் காதலர்தின நல்வால்துக்கள்!


                                                   bye 
                                               raja...........
 











                                                 
                                                    

விஜய்யின் விடுமுறை கொண்டாட்டம்

பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.

நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.

இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க‌ரீகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.

விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜமேலும் உயர்த்தியிருக்கிறது. 
thanks webdunia 

S j சூர்யாவின் புதிய படம் :



வலி,குஷி,நியூ,அ ஆ,புலி(தெலுங்கு) ஆகிய  படங்கலை இயக்கிய சூர்யா ஆடுத்து இசையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.

படத்தின் தலைப்பு “இசை “என்று வைத்துள்ளாராம் .இந்த படத்தில் சூர்யா music director ஆக நடிக்கிறாராம் .
மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஹீரோஇன் ஆக நடிக்கிறாராம் .
S j சூர்யாவின் வலக்கமான இசை அமைப்பாளர் a r ரகுமான் இந்த படாதிற்கு இசை அமைக்க வில்லயாம் அதற்கு பதிலாக சூர்யாவே இந்த படாதிற்கு இசை அமைக்கிறாராம் .
இந்த படம்  ஆகஸ்ட்15 இல் வெளியாகிறது.

Sunday, February 12, 2012

விக்ரமுக்குப் பதில் விக்ரம் பிரபு?

சற்குணத்தின் புதிய படம் கோபத்தை அள்ளி கொஞ்சுகிறேனில் யார் நடிக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விக்ரம் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இம்மாத இறுதியில் நடக்கும் படத்தின் கதை விவாதத்தில் அவர் கலந்து கொள்வார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிப்பது விக்ரம் அல்ல, விக்ரம் பிரபு என்று கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் பிரபுவின் மகன்தான் இந்த விக்ரம் பிரபு. தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சற்குணத்தின் கோபத்தை அள்ளி கொஞ்சுகிறேன் படத்தில் நடிப்பார் என்கிறார்கள். சற்குணமோ, விக்ரம் பிரபுவோ இது குறித்து தெ‌ரிவித்தால் மட்டுமே உண்மை தெ‌ரியவரும். 
source:webdunia 

மின்சாரம் இல்லாத நாடு தமிழ்நாடு :

தமிழ்நாடு தற்போலுது மின்சாரம் தட்டுபாட்டினால் வரயரை இல்லாத பவர் கட் அரசு அருவித்துள்ளது.


ஒரு நாளைக்கு சராசரியாக 8 மணிநேரம் பவர் கட் என்பது அரசு அருவித்தது ஆனால் தற்சமயம் 12 மணிநேரம் பவர் கட் ஆகி கொண்டு இருக்கிறது .பாதிக்கு பாதி என்ற கணக்கில் மின்சாரம் தரபடுகிறது.


இந்த மோசனமான மின்சாரம் தட்டுபாட்டினால் முக்கிய நகரங்களில் இருக்கும் தொலிற்சாலைகள் எல்லாம் பெரும் நஷ்டத்தில் மூடும் நீலையில் உள்ளது.


ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் நேரத்தில் தடை ஈன்றீ மின்சாரதை தருவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னால் அதை பற்றி கவனத்தில் வைக்காமடிக்கிறார்கள்.


தமிழ்நாட்டில்  வசதிஉடய,வசதியற்ற ,சராசரி வருமானம் என அனைத்து தரபட்ட மக்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல வசதி உடயவர்கள் விட்டூ வீட்டுக்கு இன்வெர்டர் வாங்கி வைத்துள்ளார்கள்,சராசரி மக்கள் சார்ஜ் லைட் மற்றும் வசதி அற்ற மக்கள் மேலுக்கு வத்தி மற்றும் விளக்கு ஒளியை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.


எப்ப இந்த மின்சாரம் தட்டுப்பாடு குறையும் என்று தெரியவில்லை.


எந்த ஒரு பிரச்சணைக்கும் தீர்வு உள்ளது அதை ஆராய்ந்தால் தீர்வு பெறலாம் .

Thursday, February 9, 2012

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை

மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது.

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹீரோ சம்பளத்திற்கு இணையான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் :

சில்வர் லைன் பிலிம்ஸ் மீகபேரிய பட்ஜெடில் உருவாகும் படம் தான் கரிகாலன் இதில் விக்ரம் கரிக்கலா சோலன் மன்னனாக  நடிக்கிறார் மற்றும் நான்கு ஹீரோஇன்கள்  இந்த படத்தில் உள்ளனர்.

LI.கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார் மற்றும் G.V.பிரகாஷ் இசை அமைக்கிறார்.


இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்காண செலவு விக்ரம் சம்பளத்திற்கு இணையாக உள்ளதாம்.


ஆயிரம் யானைகளை கொன்றவன் தான் கரிக்கலா மன்னன்.

கர்நாடக அமைச்சர்கள் பார்த்த செக்ஸ் வீடியோவுக்கு போட்டாப் போட்டி!

ர்நாடகா அமைச்சர்கள் புரட்சியை ஏற்படுத்தினார்களோ இல்லையோ, மக்களின் மத்தியில் பெரிய ஒரு கிராக்கியை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் பார்த்த 'ஜல்சா' படத்தின் டிவிடி, சிடி கிடைக்குமா என்று பலரும் கடைகளை முற்றுகையிடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பர்மா பஜார் மற்றும் நேஷனல் மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள டீலர்களிடம் அமைச்சர்களின் மசாலா எம்எம்எஸ் உள்ளதா என்று கேட்டு ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் அது டிவிடி வடிவத்தில் இதுவரை இல்லை. இனி வருமா என்று பார்க்க வேண்டும் என்று பதில் கூறி அலுத்து விட்டதாம் டீலர்களுக்கு!

பாலியல் செய்திகள் தலைப்புத் செய்திகளாகும்போது பொதுவாக வருமானம் உயர்ந்து அதிக லாபம் தரும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்னும் சிலர் மேலே போய் இந்த விடியோவை தருவதற்கு வந்துள்ள ஆர்டர்களை ஏற்றுக்கொண்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்! கூடியவிரைவில் இந்த விடியோவைப் பெற முயற்சித்து வருகிறோம்.

கடந்த முறை சுவாமி நித்யானந்தாவுடன் நடிகை ஒருவர் இருந்ததாகக் கூறப்பட்டபோது அந்த படத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது என நேஷனல் மார்க்கெட் டீலர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே செவ்வாய்க்கிழமையன்று அமைச்சர்கள் பார்த்த ஆபாசப் படத்தை 'பொதுநலன்' கருதி யாரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், எனவே அதைப் பார்க்க விரும்புபவர்கள் நீண்ட தூரம் அலைய வேண்டாம் என்றும் பெங்களூர் நகரில் செய்தி உலாவருகிறது.

மக்களுக்குத்தான் எவ்வளவு செக்ஸ் வறட்சி!

விஜயகாந்த் மீது ராமராஜன் கடும் தாக்கு!

எம்ஜிஆருடன் புகைப்படம் எடுக்கக்கூட தகுதி இல்லாத தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியல் ஆதாயத்துக்காக அவர் பெயரை உச்சரித்து வருவதாக நடிகர் ராமராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராமராஜன பேசியதாவது:

தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட மக்கள் நலனுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் செயல்படுத்தி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்து உள்ளார்.

ஜெயலலிதா தலைமையில் நேர்மையான, தூய்மையான அதிமுக தொடரும். ஏழை, எளியவர்கள் மற்றும் பெண்கள் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக உள்ளனர்.

நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இந்த வெற்றியின் மூலம் ஜெயலலிதா யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவரே பிரதமராவார். திமுக தலைவர் கருணாநிதி பற்றி மேடைக்கு மேடை பாராட்டி பேசியவர்தான் விஜயகாந்த்.

எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாத விஜயகாந்த் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக அவரது பெயரை உச்சரித்து வருகிறார். விஜயகாந்தை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்
source:webduni

வேலாயுதம் - ஒரு பாசாங்கு போஸ்டர்

வேலாயுதம் நூறாவது நாள் போஸ்டரைப் பார்த்த போது ‌ரீல் விடுவதில் சினிமாக்காரர்களை மிஞ்ச ஆளில்லை என்பது தெ‌ளிவாகப் பு‌ரிந்தது. நான்காவது வாரத்திலேயே இழுத்து மூடப்பட்ட இந்தப் படம் நூறு நாட்கள் - அதுவும் பதினைந்து தியேட்டர்களில் ஓடியதாக போட்டிருக்கிறார்கள். இதில் அனேகமாக எல்லா திரையரங்குகளிலிருந்தும் இந்தப் படத்தை நூறு நாட்களுக்கு முன்பே தூக்கிவிட்டார்கள். பிறகேன் இந்த வீண் ஜம்பம்?

WD
விஜய்யின் வேலாயுதம் மட்டுமின்றி அமோக வெற்றி என்று சொல்லப்பட்ட காவலனும்கூட பலருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படம்தான். அதற்கு முந்தைய வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற அரை டஜன் ப்ளாப்கள் அனைத்துத் தரப்பின‌ரின் பாக்கெட்டையும் கிழித்தது. இத்தனைக்குப் பிறகும் தயா‌ரிப்பாளர்கள் விஜய்யை பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாகதான் பில்டப் கொடுத்து வருகிறார்கள். வேலாயுதம் போஸ்ட‌ரில் இது வெட்ட வெளிச்சம்.

ர‌ஜினிக்குப் பிறகு அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஹீரோவாக விஜய்யே இருந்தார் என்பது தொலைதூர உண்மை. தோல்வியடைந்த வேலாயுதம், காவலன்கூட பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருக்க வேண்டியது. அதனை தடுத்தது சந்தேகமில்லாமல் விஜய்யின் சம்பளம். நாற்பது கோடி பட்ஜெட்டில் பதினைந்து பதினெட்டு கோடி விஜய்யின் சம்பளத்துக்கே ச‌ரியாகிவிடுகிறது. இந்த சம்பளத்தைக் குறைத்தால் பட்ஜெட்டும் முப்பதுக்குள் வந்துவிடும். லாபமும் அனைவரையும் சென்றடையும்.

ஹீரோக்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தால் தயா‌ரிப்பாளர் அதிக விலைக்கு படத்தை விநியோகிக்க வேண்டியுள்ளது. தியேட்டர்க்காரர்கள் ஒரு லட்சம் வசூலிக்கும் படத்துக்கு ஐந்து லட்சம் அழுகிறார்கள். இதனை ஈடுசெய்ய முதல் ஒருவாரம் டிக்கெட் ராக்கெட் விலைக்கு விற்கும். ரசிகனுக்கு வேறு வழியில்லை, திருட்டு விசிடி தான் ஒரே விமோசனம்.

திரைப்பட வர்த்தகத்தை சீட்டுக்கட்டாக கலைக்கும் ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்காமல் அவர்களுக்கு தயா‌ரிப்பாளர்கள் வெற்றி நாயகன் பெயி‌ண்ட் அடிக்கிறார்கள். இதனால் அவர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஏறுகிறது. இவர்களுக்கே இவ்வளவா என்று தொழிலாளிகளும் உழைப்புக்கு மீறிய சம்பளத்தை எதிர்பார்க்கிறார்கள்.

FILE
நண்பன் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படம்தான். அதனை விஜய்யின் சம்பளமும், ஷங்க‌ரின் சம்பளமும் பதம் பார்த்திருக்கிறது. பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இவர்களின் சம்பளம் என்றால் லாபத்துக்கு எங்கே போவது. நகரங்களில் அதுவும் மல்டிபிளிக்ஸில் லாபம் தந்த இப்படம் தனி திரையரங்குகளில் இரண்டாவது வாரமே காற்று வாங்கியது. சி சென்டர் பற்றி சொல்லத் தேவையில்லை. கன்னியாகும‌ரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் ஊர் பனச்சமூடு. இங்குள்ள திரையரங்கில் நண்பனை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டார்கள். முதல் நாள் நூறு ரூபாய் வைத்து ஓட்டியதால் பதினேழாயிரம் ரூபாய் வசூல். அடுத்த நாள் டிக்கட் விலையை குறைத்தும் கலெக்சன் பணால். முப்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் வரும் என புலம்பிக் கொண்டிருக்கிறார் திரையரங்கை லீசக்கு எடுத்து படத்தை ஓட்டியவர். இதே நிலைதான் பல இடங்களில்.

இந்த நிலையில் நண்பனைவிட சுமார் வெற்றியான வேலாயுதத்துக்கு நூறு நாள் பாசாங்கு போஸ்டர் எதற்கு? விஜய் அடுத்தப் படத்தில் இன்னும் சில கோடிகளை அதிகமாக பெறுவதற்கா? விஜய் என்ற மாஸ் ஹீரோவின் நிலையே இப்படி என்றால் யங் சூப்பர் ஸ்டார், புரட்சி தளபதி, சின்ன தளபதி படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மேக்கப்பில் முகத்தை மறைப்பவர்கள் போஸ்ட‌ரில் தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். தெய்வத்திருமகள் சென்னையில் மட்டும் நன்றாகப் போனது. அதுவும் புறநக‌ரில் புலம்பல்தான். அனேகமாக எல்லோருக்கும் தோல்வியை தந்த இந்தப் படத்திற்கு பதினைந்து நாட்களில் மூன்று வெற்றி விழாக்களை எடுத்தார்கள். எதற்கு இந்த பொழப்பு?

ஓடாத படத்துக்கு நூறு நாள் போஸ்டர் அடிப்பது, வெற்றிவிழா எடுப்பது என்று கற்பனையில் காலம் தள்ளுகிறார்கள் நமது கதாநாயகர்கள். இவர்கள் படங்களின் பட்ஜெட்டையும் படத்தின் கலெக்சனையும் தியேட்டர் வா‌ரியாக வெளியிட்டு இவர்களின் போஸ்டர் பிம்பத்தை கலைத்தால் தானாக திரையுலகம் உருப்படும்.

Tuesday, February 7, 2012

க‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்


கர்நாடசட்ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌‌நீ‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த அ‌திரடி நடவடி‌க்கையை க‌ட்‌சி மே‌லிட‌ம் எடு‌த்து‌ள்ளது.

க‌ர்நாடக‌வி‌ல் பா.ஜ.க. ஆ‌ட்‌சி நட‌ந்து வரு‌கிறது. முதலமை‌ச்சராக இ‌ரு‌ந்த எடியூர‌ப்பா ‌நிலமோசடி தொட‌ர்பாக பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌க்‌கினா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து சதான‌ந்த கவுடாவை முதலமை‌ச்சராக ‌நிய‌மி‌த்தது பா.ஜ.க. மே‌லிட‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தனது செல்போனிலஆபாபடமபார்த்ததாக அமைச்சர்கள் லக்ஷ்மனசவேதி, ி.ி பாட்டீல், கிருஷ்ணபால்மரஆகியோர் ‌மீது புகா‌ர் எழு‌ந்தது.


ஆனா‌ல், ‌அமை‌ச்ச‌ர் கிரு‌ஷ்ணா பா‌ல்ம‌ர் ஆபாச பட‌‌‌ம் பா‌ர்‌த்ததை ஒ‌ப்பு‌க் கொ‌ண்டா‌ர். இத‌ற்காகவெ‌ல்லா‌ம் பத‌வி ‌விலக வே‌ண்டிய அவ‌சிய‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

தொலை‌க்கா‌ட்‌சி, ப‌த்‌தி‌ரிகை என அனை‌த்‌திலு‌ம் ஆபாச ‌வீடியோ பட‌ம் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டதா‌ல் க‌ர்நாடக பா.ஜ.க. ஆ‌ட்‌சி‌க்கு நெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்து பா.ஜ.க. மே‌லிட‌ம் இ‌ன்று காலை அவரசமாக கூடிய ஆலோசனை நட‌த்‌தியது.


ஆபாச ‌பட‌த்தை பா‌ர்‌த்ததாக அமை‌ச்ச‌ர்க‌‌ள் லக்ஷ்மனசவேதி, ி.ி பாட்டீல், ‌கிரு‌ஷ்ணா பா‌‌ல்ம‌‌ர் ஒ‌த்து‌க் கொ‌ண்டதா‌ல் அவ‌ர்க‌‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க பா.ஜ.க. மே‌லிட‌ம் முடிவு செ‌ய்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 3 பேரு‌ம் ரா‌ஜினாமா செ‌ய்யு‌ம் படி பா.ஜ.க. மே‌லிட‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. இதை‌யடு‌த்து செல்போனிலஆபாபடமவைத்திருந்கிருஷ்ணபால்ம‌‌ர், லக்ஷ்மனசவேதி, ி.ி பாட்டீல் ஆ‌‌கியோ‌ர் இ‌ன்று த‌ங்க‌ள் அமை‌ச்ச‌ர் பத‌வியை ராஜினாமசெய்தன‌ர். தங்களதராஜினாமகடிதத்தகர்நாடமுதலமைச்ச‌ர் சதான‌ந்தா கவுடா‌விட‌‌ம் வழங்கினர்.

ஆபாச பட‌ம் பா‌‌‌ர்‌ப்பதெ‌ல்லா‌ம் சகஜ‌‌ம்ம‌ப்பா எ‌ன்று க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்களே கூ‌றி‌யிரு‌ப்பது அர‌சிய‌லி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன் ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் அ‌‌‌தி‌ர்வு அலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.