விபசாரத்தை தடுக்க வேண்டிய காவல்துறை, ''விபசாரம் செய்யுங்கள் நாங்கள் இருக்கிறோம்'' என்று காவலர் ஒருவர் விபசாரத்துக்கு துணை போன நிகழ்வு சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசார விடுதி நடத்தி வந்த இளம்பெண் சுபா என்ற ஹன்சியை கடந்த அக்டோபர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹன்சிக்கு விபசாரம் தொழில் செய்ய துணையாக இருந்தவர் காவலர் அரிகிருஷ்ணன். விபசார தடுப்பு பிரிவில் இருந்த காவலர் அரிகிருஷ்ணனுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இளம்பெண் ஹன்சி மூலம் தனது ஆசையை தீர்த்துக் கொண்ட காவலர் அரிகிருஷ்ணன், உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். காவலர் அரிகிருஷ்ணனின் ஆதரவுடன் ஹன்சிகா தனது விபசார தொழிலை ஏகபோகமாக நடத்தி வந்துள்ளார்.
நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டம் அதிகரிக்கவே, அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கூட்டத்தை பார்த்து நடப்பது மசாஜ் கிளப்பா? விபசாரமா? என்பது மேலும் வலுத்தது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு.
விபசாரத் தொழில் நடத்த காவலர் ஒருவரே துணை போனதும் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறை மேல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. ஆனால் காவலர் அரிகிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் காவலர் அரிகிருஷ்ணன், விபசார தடுப்பு பிரிவில் இருந்து சென்னை அயனாவரம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அரிகிருஷ்ணன், வேலியே பயிரை மேய்ந்த கதையாக தொடர்ந்து விபசாரத்துக்கு துணை போனார்.
அப்படி இருந்தும் புகார்கள் கூறப்பட்டு வந்தாலும் காவலர் அரிகிருஷ்ணன் ஆதரவோடு செல்லசெழிப்போடு விபசார தொழிலை நடத்தினார் இளம்பெண் ஹன்சி. ஒரு கட்டத்திற்கு மேல் காவலர் அரிகிருஷ்ணன் மீது புகார்கள் குவிந்ததால் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தார் காவல்துறை இணை ஆணையர் சேஷசாயி.
தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் அரிகிருஷ்ணனை கைது செய்ய உயர் காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் காவலர் அரிகிருஷ்ணன் கம்பி எண்ணுவர் என்று தெரிகிறது.
சென்னை தியாகராயநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசார விடுதி நடத்தி வந்த இளம்பெண் சுபா என்ற ஹன்சியை கடந்த அக்டோபர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹன்சிக்கு விபசாரம் தொழில் செய்ய துணையாக இருந்தவர் காவலர் அரிகிருஷ்ணன். விபசார தடுப்பு பிரிவில் இருந்த காவலர் அரிகிருஷ்ணனுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இளம்பெண் ஹன்சி மூலம் தனது ஆசையை தீர்த்துக் கொண்ட காவலர் அரிகிருஷ்ணன், உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். காவலர் அரிகிருஷ்ணனின் ஆதரவுடன் ஹன்சிகா தனது விபசார தொழிலை ஏகபோகமாக நடத்தி வந்துள்ளார்.
நாளுக்கு நாள் அடுக்குமாடி குடியிருப்பில் கூட்டம் அதிகரிக்கவே, அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கூட்டத்தை பார்த்து நடப்பது மசாஜ் கிளப்பா? விபசாரமா? என்பது மேலும் வலுத்தது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு.
விபசாரத் தொழில் நடத்த காவலர் ஒருவரே துணை போனதும் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறை மேல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. ஆனால் காவலர் அரிகிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் காவலர் அரிகிருஷ்ணன், விபசார தடுப்பு பிரிவில் இருந்து சென்னை அயனாவரம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அரிகிருஷ்ணன், வேலியே பயிரை மேய்ந்த கதையாக தொடர்ந்து விபசாரத்துக்கு துணை போனார்.
அப்படி இருந்தும் புகார்கள் கூறப்பட்டு வந்தாலும் காவலர் அரிகிருஷ்ணன் ஆதரவோடு செல்லசெழிப்போடு விபசார தொழிலை நடத்தினார் இளம்பெண் ஹன்சி. ஒரு கட்டத்திற்கு மேல் காவலர் அரிகிருஷ்ணன் மீது புகார்கள் குவிந்ததால் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தார் காவல்துறை இணை ஆணையர் சேஷசாயி.
தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் அரிகிருஷ்ணனை கைது செய்ய உயர் காவல்துறை அதிகாரிகள் மட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் காவலர் அரிகிருஷ்ணன் கம்பி எண்ணுவர் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment