கர்நாடகவில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நிலமோசடி தொடர்பாக பதவியில் இருந்து விலக்கினார். இதைத் தொடர்ந்து சதானந்த கவுடாவை முதலமைச்சராக நியமித்தது பா.ஜ.க. மேலிடம்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக அமைச்சர்கள் லக்ஷ்மன் சவேதி, சி.சி பாட்டீல், கிருஷ்ணா பால்மர் ஆகியோர் மீது புகார் எழுந்தது.
தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்திலும் ஆபாச வீடியோ படம் வெளியிடப்பட்டதால் கர்நாடக பா.ஜ.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. மேலிடம் இன்று காலை அவரசமாக கூடிய ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து 3 பேரும் ராஜினாமா செய்யும் படி பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து செல்போனில் ஆபாச படம் வைத்திருந்த கிருஷ்ணா பால்மர், லக்ஷ்மன் சவேதி, சி.சி பாட்டீல் ஆகியோர் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதலமைச்சர் சதானந்தா கவுடாவிடம் வழங்கினர்.
ஆபாச படம் பார்ப்பதெல்லாம் சகஜம்மப்பா என்று கர்நாடக அமைச்சர்களே கூறியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் அதிர்வு அலை ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment