Monday, February 20, 2012

அனன்யாவின் அன் லிமிடெட் லவ்

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹோம்லி டைப் அனன்யா. அதனால்தான் காதலித்து கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறி, பெற்றோர் பார்த்த தொழிலதிபர் ஆஞ்சநேயனை மணக்க சம்மதித்தார். ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று நிச்சயதார்த்தத்துக்கு பிறகே தெ‌ரிய வந்து அனன்யாவின் அப்பா அவர் மீது போலீஸில் புகார் தந்தார். இதெல்லாம் அனைவரும் அறிந்த பிளாஷ்பேக்.

இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக அனன்யா வாய் திறந்திருக்கிறார்.

அதாகப்பட்டது, அனன்யாவை அவரது பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகச் சொன்னது பொய்யாம். அதேபோல் ஆஞ்சநேயன் மீது வேண்டுமென்றே அவதூறாக களங்கம் கற்பிக்கிறார்களாம். அதையெல்லாம் பொய் என்று நிரூபித்து, பிரச்சனைகள் அடங்கிய பின் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொள்வாராம். ஆஞ்சநேயன்தான் என் புருஷன் என்பதில் சந்தேகமில்லை என்று தொடை தட்டாத குறையாக சத்தியம் செய்திருக்கிறார் அனன்யா.

இந்த விளக்கத்தில் ஆஞ்சநேயனின் முதல் திருமணம் பற்றியோ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது குறித்தோ அனன்யா எதுவும் தெ‌ரிவிக்கவில்லை. ஆஞ்சநேயன் மீது அனன்யாவுக்கு அவ்ளோ காதல்.


0 comments:

Post a Comment